Home > Work > நகுலன் வீட்டில் யாருமில்லை [Nakulan veettil yaarumillai]
1 " நகுலன் தன் பூனைகள் அளவிற்கு எந்த இலக்கியவாதியையும் நேசித்தது இல்லை. அன்றும் அப்படியே நடந்தது. நான் நகுலனின் வீட்டுத் தாழ்வாரத்தில் அமர்ந்துகொண்டபோது அவர் மாறாத சிரிப்புடன் மனிதர்களைவிட பூனைகள் உயர்வானதுதானில்லையா என்று கேட்டார். நான் பூனைகளுக்கு ஒன்பது உயிர் இருப்பதாகச் சொன்னேன். அவர் பலத்த சிரிப்புடன் அவை ஒருபோதும் தற்கொலைக்கு முயன்றதேயில்லை. உலகில் இதுவரை ஒரு பூனையாவது அப்படி முயன்றிருக்கிறதா என்று கேட்டார். பூனை ‘என்ன அசட்டுத்தனம் இது’ என்பதுபோல மெதுவாக நடந்து வீட்டினுள் போனது. "
― S. Ramakrishnan , நகுலன் வீட்டில் யாருமில்லை [Nakulan veettil yaarumillai]